பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பண்டாரவிளை பகுதியில் சிலுவைராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ஜெஸ்டின் அருள் ஜோஸ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய், தந்தை இருவரும் இறந்து விட்டதால் ஜெஸ்டின் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை ஜெஸ்டின் விஷம் குடித்து அவரது வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஜெஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெஸ்டின் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.