வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து பாடகி சின்மயி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அவர் என்னை கட்டிப்பிடித்த போது ஏதோ தவறாக இருக்கிறது என்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு பாலியல் தொல்லை செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் பலவற்றை அவர் பகிர்ந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறிய அவர், தன்னை யாரேனும் கொலை செய்தால் அவற்றை வெளியிடுமாறு நண்பர்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைரமுத்துவால் தான் பாலியல் துன்புறுத்தல் அனுபவித்ததாகவும், சுவிட்சர்லாந்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின்போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அப்போது தன்னை இனம்புரியாத பயம் ஆட்கொண்டது என்றும் அதனால் அவருடன் இருப்பதுதான் தவிர்த்ததாகவும் ஆனால் அவர் பலமுறை அவர் தன்னை ஓட்டல் அறைக்கு அழைத்ததாகவும், ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அவர் அப்போது பரபரப்பு குற்றச்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.