Categories
மாநில செய்திகள்

என்னை ஏமாற்றி விட்டார்…. விஜயின் தாய் எடுத்த முடிவு…. பரபரப்பு பேட்டி….!!

எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இருந்து விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார்.

நேற்று எஸ் ஏ சந்திரசேகர் அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பது கட்சியாக மாறியுள்ளது என்றும், மேலும் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதை அறிந்த நடிகர் விஜய் எனது தந்தை திரு எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித சம்பந்தமும் இல்லை என தனது ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாக என்னிடம் கையெழுத்து பெற்றார். கட்சி தொடங்குவதாக இரண்டாவது முறை எஸ் ஏ சந்திரசேகர் கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. மேலும் எனது கணவர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் நான் விலகிவிட்டேன் என்று கூறினார்.

Categories

Tech |