திண்டுக்கல் அருகே தீராத வயிற்று வலியால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு ஆடிப்பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் தனசேகரன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தனசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.