Categories
மாநில செய்திகள்

என்னாது!…. தமிழக துணைவேந்தர் பதவி 50 கோடிக்கு விற்பனை…. முன்னாள் ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பஞ்சாப் மாநில லூதியாணாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர், பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பஞ்சாப் ஆளுநராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்பு தமிழக ஆளுநராக அதாவது 20 பல்கலைக்கழகம் வேந்தராக 4 ஆண்டு காலம் இருந்துள்ளேன். எனது பதவி காலதில் சட்டப்படி 27 துணை வேந்தர்களின் நியமித்துள்ளேன்‌. தமிழகத்தின் நிலைமை மிக மோசமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள கல்வித்துறையை ஒழுங்குபடுத்தியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அவரிடம் பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும். இதனையடுத்து அரசியல் சாசனத்தை பாதுகாப்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன். அது யாராலும் தடுக்க முடியாது. நான் என் கடமையை செய்யவில்லை என்றால் நான் குற்றவாளியாக உணர்வேன். ஒரு ஆளுநரின் பொறுப்பு அனைவருக்கும் வழிகாட்டுவதும் பல்கலைக்கழகங்களை கவனிப்பதுமே. என்ன நடந்தாலும் என் கடமையை செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |