பாலிவுட் நடிகை ஆலியாபட் – நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர். கோலாகலமாக நடந்த இவர்களது திருமணத்தில் பெரும்பாலான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அண்மையில் ஆலியா பட் கர்ப்பமாகி, பிறகு மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.
அத்துடன் ஆலியாபட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூரும் உடன் இருக்கும் புகைப்படமானது வைரலாகியது. இதற்கிடையில் அச்சமயம் திருமணத்துக்கு முன்னதாகவே ஆலியாபட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியாபட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இவர்களுக்கு திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆலியாபட் தன் சமூகவலைத்தளப்பக்கத்தில் “இது எங்களது வாழ்வில் கிடைத்த நற் செய்தி. இதோ எங்களது குழந்தை. என்னவொரு மாயாவி அவள்.. நாங்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அத்துடன் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர். இறுதியில் அன்புடன் ஆலியா மற்றும் ரன்பீர் என்று பதிவிட்டிருக்கிறார்.