நடிகர் ஆர்யா எனிமி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எனிமி . இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இதையடுத்து 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் சென்னையில் மீதமுள்ள படப்பிடிப்பு நடைபெறும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.
And…. thats a WRAP for @arya_offl na. enjoyed every bit of this 😊😊. and now rushing home before the curfew 🤭 #ENEMY pic.twitter.com/RFwCtWbLFh
— Anand Shankar (@anandshank) April 23, 2021
மேலும் விரைவில் எனிமி படத்தின் டீசர் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எனிமி படத்தின் படப்பிடிப்பை நடிகர் ஆர்யா நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தற்போது நடிகர் ஆர்யா நடிப்பில் அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது