Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“எனது பேத்தியை மீட்டு தாங்க” மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த பாட்டி…. போலீஸ் விசாரணை…!!

பேத்தியை மீட்டுத்தர கோரி பாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டி ஒருவர் தனது மகள் மற்றும் பேரனுடன் வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2021-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது பேத்தியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு மங்களமேடு காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனை அடுத்து ரஞ்சித்திடம் இருந்து கடந்த அக்டோபர் மாதம் எனது பேத்தியை மீட்டோம்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் ரஞ்சித் மீண்டும் ஆசை வார்த்தைகள் கூறி எனது பேத்தியை கடத்தி சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்த பிறகு எனது பேத்தி உறவினரான ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசியுள்ளார். இதுகுறித்து எனது மகன் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண், அவரது மகன், உறவினர் ஆகியோர் இணைந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பேத்தியை மீட்டுத்தர வேண்டுமென அந்த பாட்டி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |