பிரபாஸ் தனது திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என உறுதிபடுத்தியுள்ளார்.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர்.
பிரபாஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது திருமணம் எப்போது என கேட்டால் காமெடியாக பதில் கூறி நழுவி விடுவார். ஆனால் திருமணம் செய்தால் காதல் திருமணம்தான் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபாஸிடம் பத்திரிக்கையாளர்கள் திருமணம் குறித்து கேட்டபோது “என் திருமணம் நிச்சயமாக காதல் திருமணம்தான்” ஆனால் “எப்போது என்று என் கையில் இல்லை” என்று கூறி நழுவி விட்டார்.