சவுதிஅரேபியா நாட்டில் ஒரு பெண் தன் கணவரிடம் விவாகரத்து கேட்டதோடு, கொடுக்கவில்லை என்றால் வெளியே நிர்வாண ஊர்வலம் செல்வேன் என்று அதிரடியாக மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி கணவன் ஷரியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதாவது, இந்த விவாகரத்து முடிவு தன் விருப்பத்திற்கு எதிரானது எனவும் அதனால் அதனை ரத்து செய்யும்படியும் கேட்டு கொண்டார்.
இருந்தாலும் அவரது வழக்கை எடுத்துக்கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது. ஷரியா சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என்று அவரிடம் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகிறது என்று அந்நாட்டு புள்ளியியலுக்கான பொது அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற 10 வருடங்களில் 60 சதவீதம் அளவுக்கு திகைக்க வைக்கும் வகையில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துவிட்டன எனவும் தெரிவித்துள்ளது.