Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எனக்கு பாதுகாப்பு வேணும்…. செல்போன் கோபுரம் மீது ஏறிய சுயேச்சை வேட்பாளர்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பாதுகாப்பு கேட்டு சுயேச்சை வேட்பாளர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சாயல்குடி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் சுயேச்சை வேட்பாளராக சரவணமூர்த்தி (வயது 52) என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சாயல்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி சரவணமூர்த்தி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அறிந்த கீழக்கரை துணை சூப்பிரண்டு அதிகாரி சுபாஷ், மதுவிலக்கு துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சாயல்குடி தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று அவரை மீட்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் போராடி செல்போன் கோபுரத்தில் இருந்த சரவணமூர்த்தியை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். இதனையடுத்து அவரை சாயல்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |