Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு சீட் கிடைக்காதா….? மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜித் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுஜித் 2 முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தேர்ச்சி பெறவில்லை. தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் சுஜித் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் மருத்துவ படிப்பு படிப்பதற்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் தனது தாய் கடைக்கு சென்ற சமயத்தில் சுஜித் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த தாயார் சுஜித் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |