Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு உடல்நலம் சரியில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் இருக்கும் செட்டியந்தல் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் மூரார் பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்து விட்டு  மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |