தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தொழிலாளியான தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், ராஜா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாஸின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.