வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருவிடையார்பட்டியில் கூலி தொழிலாளியான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் அனைவரும் பெண்பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் வீடு திரும்பியவுடன் தனக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என நாகராஜன் கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.