நீட் தேர்வால் மரணமடைந்த மாணவி பற்றி வெளியான வீடியோவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நீட் தேர்வால் மரணம் அடைந்த மாணவி அனிதா அதிமுகவை ஆதரிப்பது போன்று வெளியான வீடியோ கடும் சர்ச்சைக்கு உள்ளானது. அதனால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடியோவை நீக்கினார். இந்நிலையில் எனது டுவிட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகியுள்ளது. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார். அமைச்சர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.