Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எந்த வசதியும் இல்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலப்பாட்டம் கரிசல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்படவில்லை. இதற்கான இடத்தை அப்பகுதி மக்கள் தேர்வு செய்து கொடுத்த பிறகு அரசு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |