Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் விவசாயியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |