Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த அடையாளமும் தெரியல…. பறிபோன முதியவர் உயிர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள பூப்பாண்டியபுரம் பகுதியில் உத்திரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பனைத்தொழில் செய்து வரும் இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து உத்திரம் மீது மோதி வேகமாக நிற்காமல் சென்றுள்ளது.

இந்த கோர விபத்தில் உத்திரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாயல்குடி காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |