Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்பார்த்து கொண்டிருந்த குடும்பங்களுக்கு…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு….!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வருகின்ற 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் கடந்த மாதம் 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் 43 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்களை நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து வருகின்ற 25ஆம் தேதி வரை மீண்டும் மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 43 மீனவர்களை மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகையொட்டி மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த செய்த மீனவர்களின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |