இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு செய்ததும் தான்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்திய அணி குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். பும்ரா உலகின் சிறந்தபௌலர், முகமது சமி சிறந்த வீரர் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு சிறந்த தொடக்க ஜோடியாக உள்ளனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் தயாராக இருப்பார்கள் என்று பேட்டியில் தெரிவித்தார்.