ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகு ராஜ், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை கடுஞ்சொற்கள் கொண்டு விமர்சித்துள்ளார். “அம்மா போட்ட உத்தரவு” எனும் தலைப்பில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அவற்றில் , எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுக-வை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அப்பதிவில், எதற்காக அவர் டெல்லிக்கு போறாரு. கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா (அல்லது) எதையாவது கொடுக்கப் போறாங்களா.
குழப்பத்திலேயே நடந்து வந்துட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது பாட்டி வந்து நின்னுக்கிட்டு தம்பி எடப்பாடி கையில மட்டும் இந்த கட்சி சிக்கிடக் கூடாது தம்பி. தலைவர் ரத்தம் சிந்தி வளர்த்ததுப்பான்னு கண்ணை கசக்க, அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாதுன்னு நான் ஆறுதல் சொல்ல, அப்பவும் அந்த பெருசு என்ன விடுறதா இல்ல. உறுப்பினர் கார்டை சொக்காவோட உள்பாக்கெட்டில் இருந்து எடுத்து காட்டிக்கிட்டு, தம்பி எடப்பாடி கையில கட்சி சிக்குறதும் எலக்ட்ரிக் சுடுகாட்டு மெஷினுக்கிட்ட டெட்பாடி சிக்குறதும் ஒன்னுதான் தம்பின்னு, அந்த ஆளு விடாம பினாத்த எனக்கு காண்டாகி அப்படி எதுவும் நடக்காது என்று கூறினேன்.
அவ்வாறு எடப்பாடி துட்டுதான் எங்கும் ஜெயிக்கும்னா வெக்காளி எள்ளும் தண்ணியும் எறைச்சுப்புட்டு எம்.ஜி.ஆரு புள்ளிவச்சு வரைஞ்ச கட்சிய எடப்பாடி கொள்ளிவச்சு முடிச்சாருனு தலைமுழுக வேண்டியது தான்னு கோபத்துல சொல்லிப்புட்டு வந்திட்டேன். எனினும் ராவெல்லாம் உறக்கம் வரல. பின் விடியற்காலை எழுந்து தலைவர் படத்தையும் அம்மா படத்தையும் எடுத்து வச்சு வேண்டுனேன். அதாவது எப்படியாவது கட்சியை காப்பாத்திப்புடுங்கன்னு உருகி கும்பிட்டேன். ஏன்டா உசுரோட இருக்கும்போதும் நாங்க தான் கட்சிய காப்பாத்துனோம்.
இப்ப செத்த பிறகும் நாங்கதான் கட்சிய காப்பாத்தனுமாக்கும். பணத்தை வச்சுக்கிட்டு ஆடும் எடப்பாடியை, ஜனத்த வச்சு உங்களால் வெரட்ட முடியாதா? தொண்டர்கள திரட்டி அந்த டெண்டர் கூட்டத்தை துரத்தி அடிக்கிறத விட்டுப்புட்டு, எங்ககிட்ட வந்து நின்னு புலம்பறியே உனக்கு வெட்கமா இல்லயா?. ஓபிஎஸ் பின்னாடி போ மத்ததெல்லாம் தானா நடக்கும்னு அதட்ட, அப்பதான் புரிஞ்சது அண்ணாவின் வாரிசு மக்கள் திலகம்னு. மக்கள் திலகத்தின் வாரிசு புரட்சித் தலைவி அம்மான்னா. அம்மாவின் அரசியல் வாரிசு அந்த மகராசி ரெண்டு தடவை மகுடம் சூட்டி அடையாளம் காட்டுன அண்ணன் ஓ.பி.எஸ் தானே. நமது வெற்றியை நாளை சரித்திரம் கூறும் எடப்பாடி பணத்தை இப்படை வெல்லும். வெற்றிவேல் வீரவேல்!.. என எழுதியிருக்கிறார்.