கடை ஒன்றில் கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் மரங்களை திருடி சென்றுள்ள சம்பவம் சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் Wimbledan இருக்கும் கடை ஒன்று உள்ளது. அதில் இரவு உள்ளூர் நேரப்படி 7.40 மணிக்கு திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அந்த கடையின் முதலாளி ஜோஷ் லைல் கூறுகையில், “சுமார் 3,000 பவுண்ட் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக விற்பனையில் பாதிப்பு இருக்கும் நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது எனக்கு மனவருத்தத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடையின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர்.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடையில் இருந்து கிறிஸ்துமஸ் மரங்களை திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டு மக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும் இதுபோன்ற பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.