Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! உயர்நீதி மன்றத்தை ஈர்க்கும் வகையில்… வக்கீல்கள் உண்ணாவிரதம்..!!

பெரம்பலூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி குன்னம் பகுதியில் வருகிற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்க உத்தேசித்துள்ளது. அதனை கைவிடக்கோரி 9-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு சங்க செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர். மேலும் நாளை மறுநாள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Categories

Tech |