காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நாடு முழுதும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள அவர் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடைப்பயணத்தின் இடையில் ஓய்வின் போது ராகுல்காந்தி, தன்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த அடிப்படையில் அவர் மக்களுடன் பேசும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மக்களுடன் உரையாடும் போது ஒருவர் ராகுலிடம், “நீங்கள் எந்த சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறீர்கள்..? என்று கேட்டார். அதற்கு ராகுல், என் அம்மா எனக்கு சன்ஸ்க்ரீன் அனுப்பியுள்ளார். எனினும் அதனை நான் பயன்படுத்தவில்லை என்று கூறி தோலின் நிறத்தைக் காட்டினார். அத்துடன் நடைப்பயணத்தின் இடையில் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்..? என்று கேட்டதற்கு, “தொலைபேசியில் என்னுடைய அம்மா, தங்கையிடம் பேசுவேன். மேலும் எனது நண்பர்களிடம் பேசுவதோடு, புத்தகம் படிப்பேன்” என அவர் கூறினார்.