Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல… மலர போவது எங்கள் ஆட்சி… கமல்ஹாசன் அதிரடி பேச்சு…!!!

எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதிலும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், இப்போது மலர போவது மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சி அல்ல, மக்களின் ஆட்சி என்றும் எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல என்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை நான்கு மடங்காக உயர்த்த போகிறோம் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |