Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்கள் ஊருக்குள் பேருந்து வர வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லராமபுரம்  கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மாணவர்கள் சங்கரன்கோவிலில் உள்ள அரசு கலைக்கல்லூரி, மனோ கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பேருந்தின் மூலம் சென்று படித்து  வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக பேருந்து ஊருக்குள் வரவில்லை. இதனால் மாணவர்கள் 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று  பேருந்து ஏறி கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று திடீரென வல்லராமபுரம் விளக்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து  தகவல் அறிந்த சப் -இன்ஸ்பெக்டர்  பாண்டியன், அரசு பணிமனை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |