தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கொண்டாடினர். மேலும் சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டது.
அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், எம் எல் ஏக்கள் ஆகியோரின் புகைப்படங்களுடன் ” எங்களைத் தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்” என்ற வசனமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது. இது அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.