Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” கல்லூரியில் சேர வேண்டிய நேரத்தில் திருமணம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊ.மாரமங்கலம் பள்ளக்காட்டூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஜித்(22) என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக அஜித்தும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ரூபினி கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் ரூபினியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பொம்மிடியில் இருக்கும் முருகன் கோவில் வைத்து திருமணம் செய்துள்ளனர். பின்னர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ரூபினியை அஜித்துடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |