Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களின் பிழைப்பே போச்சு…! குறைந்த சுற்றுலா பயணிகள் வருகை…. புலம்பும் வியாபாரிகள்….!!

சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

எடப்பாடியை அடுத்த இயற்கை அழகுடன் மலைகள் சூழ்ந்த, ரம்மியமான பூலாம்பட்டி காவிரி ஆற்றை சுற்றி பார்க்க பொதுமக்கள் வருகை புரிவது வழக்கம். இது தவிர விடுமுறை நாட்களில் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகில் சென்று இயற்கை அழகினை கண்டு ரசித்து செல்வர்.

மேலும் அங்குள்ள கடைகளுக்கு சென்று மீன் உணவை சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, இந்த வாரம் பூலாம்பட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள படகு துறை தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |