பிரபல நாடு மீண்டும் தனது ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.
பிரபல நாடான நேட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்க ரஷியா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே திட்டமிட்டது. ஆனால் இன்று தான் ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியது. இதில் ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து என 30 நாடுகளை சேர்ந்த 60 விமானங்கள் பங்கேற்கும். இந்த பயிற்சி இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.
ஆனால் பலரும் இந்த பயிற்சியை கைவிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்கு நேட்டா பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியதாவது. உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக நாங்கள் திடீரென்று இப்போது இந்த பயிற்சியை ரத்து செய்தால் அது மிகவும் தவறானதாக அமையும். மேலும் போர் வரும் முன்னர் முன்னெச்சரிக்கையாக தடுப்பதே நேட்டா ராணுவத்தின் வலிமை. எனவே நாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.