பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டதாகவும், பல்வேறு ஊழல்களை அரங்கேற்றியதாகவும் பங்குச்சந்தை முன்னால் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பங்குச்சந்தை அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படி ஆனந்த் சுப்ரமணியம் தான் அந்த இமயமலை சாமியார் எனவும் அது நன்றாக தெரிந்திருந்தும் சித்ரா ராமகிருஷ்ணா ஆனந்த் சுப்பிரமணியத்திடம் பல்வேறு ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது ஆனந்த் சுப்பிரமணியம் தான் இமயமலை சாமியார் என நன்றாக தெரிந்திருந்தும் சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு ரகசிய தகவல்களை ஆனந்த் சுப்பிரமணியத்திடம் தெரிவித்தார் எனவும், இருவரும் சேர்ந்து பங்கு சந்தையில் பல்வேறு ஊழல்களை அரங்கேற்றியுள்ளனர் எனவும் சிபிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.