Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊறுகாய் குடுடா… மறுத்த நண்பர்… இறுதியில் நடந்த கொலை வெறிச்செயல்…!!!

கோவையில் ஊறுகாய் தராததால் வடமாநில வாலிபரை சக தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பீகாரை சேர்ந்த 17 வயதுடைய சித்து குமார் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் அங்கு ஒரு விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவருடன் கார்த்திக்(35), பஷ்ரங்கி குமார்(20) உள்ளிட்ட மூன்று பேர் தங்கியுள்ளனர். கம்பெனி விடுதியில் தங்கி வேலை பார்க்கும் அவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு மதிய நேரம் 4 பேரும் தனித்தனியே வந்து சாப்பிட்டுவிட்டு பின்னர் மீண்டும் வேலைக்குச் சென்று உள்ளனர்.

சித்து குமார் மற்றும் பஷ்ரங்கி குமார் ஆகிய இருவரும் சாப்பிடுவதற்கு அறைக்கு சென்றனர். அப்போது குழம்பு குறைவாக இருந்ததால் ஊறுகாய் வைத்து சாப்பிடலாம் என்று சித்து குமார் கூறியுள்ளார். ஆனால் பஷ்ரங்கி குமார் ஊறுகாய் பொட்டலத்தை எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மிகுந்த ஆத்திரமடைந்த பஷ்ரங்கி குமார், சித்து குமாரை கழுத்தை நெரித்து பலமாக தாக்கியுள்ளார். அதனால் அவர் கீழே விழுந்ததால் அவர் என் நெஞ்சில் பஷ்ரங்கி குமார் பலமாக தாக்கியுள்ளார்.

அதனால் அவர் உடனடியாக மயங்கினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சித்து குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் கொலையாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |