Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பீகார் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களை போன்று பள்ளிகளை திறக்க வேண்டுமென மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் பரிந்துரை செய்துள்ளார். முதலில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளைத் திறக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |