தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அடுத்தடுத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது வருகிற 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் கோவில்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்கோவில்களின் குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படுவதில் கோவில்கள் திறப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.