தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை தொடரும். மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடரும். மாநிலங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும். திரையரங்குகள் திறக்க தடை என்றும் உத்தரவிட்டுள்ளார்.