நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.உடற்பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் முறையான பாதுகாப்போடு செயல் படலாம் என்றும் திரையரங்குகள் முறையான பாதுகாப்போடு இரவு 9 மணி வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.