இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அம்மாநில அரசு இரவு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 5 பேருக்கும் மேற்பட்ட நபர்கள் சாலையில் ஒன்றாக சேர்ந்து நடமாடக் கூடாது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.