Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தடுப்பூசி போடும் பணி…. தொய்வின்றி நடைபெறும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும், மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர்,”ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெற வேண்டும். முழு ஊரடங்கின் போது விதிகளை முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |