ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ., சார்பாக மாவட்ட அளவிலான 12 வது செஸ் போட்டி இரண்டு நாட்களாக ஊட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.
ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டு பொதுப்பிரிவில் யோகேஷ், நபீலா, ரேவந்த், குயின் ஆப் ஷீபா, சால்மன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றார்கள். இதை தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய வாலிபால் வீரர் சந்திர மோகன் பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.