Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் நாதக போட்டியிடாத…. இடங்களே இருக்க கூடாது…. சீமான் பேட்டி…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு வரும் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனையடுத்து 23ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதன் பிறகு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத இடங்களே இல்லை என்பதை உறுதிப்படுத்த களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |