உல்லாசமாக இருக்கும்போது அழுத குழந்தையை பார்க்க சென்ற கள்ளக்காதலியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகில் முடிகண்டநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி 32 வயதுடைய நந்தினி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வருடத்திற்கு முன் செந்தமிழ்ச்செல்வன் இறந்துள்ளார். இதன்காரணமாக நந்தினி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நந்தினி சேத்தியாதோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் மளிகை கடையில் வேலை பார்த்து வருகின்றார்.
நந்தினி வேலை பார்க்கும் கடைக்கு எதிரே இருக்கின்ற பூக்கடையில் சேத்தியாத்தோப்புத் தெருவில் வசித்த தாமோதரன் என்பவருடைய மகன் 35 வயதுடைய மணிகண்டன் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ள நிலையில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து மணிகண்டன் நந்தினி வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் நந்தினியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கே இருவரும் வீட்டின் பின்பக்கம் உல்லாசமாக இருந்தபோது நந்தினியின் குழந்தை அழுதது. இந்த சத்தத்தை கேட்டு அழுத குழந்தை பார்ப்பதற்கு நந்தினி அங்கு செல்ல முயன்றபோது மணிகண்டன் வீட்டிற்கு செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை எடுத்து நந்தினியை குத்தியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் நந்தினி கத்தி சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்துள்ளனர்.