கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவியதிற்கு காரணம் சீனா தான் என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வைரஸ் தொடங்கிய காலத்திலிருந்தே அதற்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதைப்பற்றி வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் கூறுகையில்,”கொரோனா பரவல் விஷயத்தில் சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. சீனா நினைத்திருந்தால் உலக நாடுகளுக்கு தொற்று பரவாமல் தடுத்திருக்க இயலும். ஆனால் வைரஸ் பரவுவதை தடுக்க கூடாது என்ற முடிவை எடுத்துள்ளது சீனா. சீனாவில் உள்ள வூகான் நகரில் தான் முதலில் இந்த வைரஸ் பரவியிருக்கிறது. ஆனால் மற்ற பகுதிகளுக்கு தொற்றை பரவ விடாமல் பார்த்துக் கொண்ட சீனா உலக நாடுகளுக்கு தொற்றை பரவ விட்டு விட்டது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.