உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அனைவரும் சமமாக நடத்தப்படும் இந்தியாவைக் காண உறுதியேற்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
உலகம் முழுவதும் இன்று (பிப்..21) தாய் மொழி தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் தாய்மொழி தினத்தை கொண்டாடும் அடிப்படையில் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதாவது, மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு வணக்கங்கள். அதனை தொடர்ந்து அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.