மாவட்ட ஆட்சியரின் 3 வயதுடைய மகள் உலக சாதனை படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டிக்கு தீபிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய மீரா அரவிந்தா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி 58 நடன முத்திரைகள் மற்றும் நவரசபாவனைகளை 10 நிமிடங்களில் செய்து காட்டி நோபல் உலக சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பசுபதி, நவீன்ராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இந்நிலையில் மீரா அரவிந்தாவின் குரு செல்வராணி குமாரை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் வைத்து கௌரவித்தனர். இதனை அடுத்து நோபல் உலகசாதனை பதிவு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குனர் திலீபன் மற்றும் மாநில இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் மீரா அரவிந்தாவுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.