சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த தாக்குதலில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.