உலகச் சந்தைகளில் பொம்மைகளை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிராம மக்களிடம் உரையாற்றுவார். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்று மண் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். இதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர்களை பற்றி பெருமிதமாக தெரிவித்திருந்தார்.
மேலும் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவிற்கு பல பெருமைகளை தேடித் தருகிறது என்று கூறினார். இதையடுத்து பொம்மைகளை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடாக ஒருநாள் இந்தியா உருவாகும் என்று கூறியுள்ளார். நாட்டில் 62 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அவர் இந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.