உலகின் முதல் குறுஞ்செய்தியில் NFT- யை ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியன்று உலகின் முதல் குறுஞ்செய்தி வோடபோன் நெட்வொர்க் மூலமாக அனுப்பப்பட்டது. அதனை வோடபோன் ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ரிசீவ் செய்து வைத்திருந்தார். அது என்ன என்றால் ‘Merry Christmas’ என்ற செய்தி தான் உலகில் முதன் முதலில் அனுப்பப்பட்ட முதல் குறுஞ்செய்தி. பிரான்ஸ் நாட்டில் உள்ள Aguttes ஏல மையத்தில், இந்த NFT வரும் 21-ஆம் தேதி நாளை ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏலத்தில் எடுப்பவர் எத்திரியம் கிரிப்டோ கரன்சியில் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
உலகின் முதல் குறுஞ்செய்தி நாளை ஏலம்…. பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!
