எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அது உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் புதுடெல்லியில் 48-வது இடத்தையும், மும்பை 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தனிமனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 76க்கும் மேற்பட்ட குறியீடுகளின் அடிப்படையில் வைத்து உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில், டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் தான் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை டொராண்டோவும், மூன்றாவது இடத்தை சிங்கப்பூரும் பிடித்தது. இதில் இந்தியாவின் புதுடெல்லி 48-வது இடத்தையும், மும்பை 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் மதிப்பெண் அடிப்படையில் புது டெல்லி 52.8 புள்ளிகளையும், மும்பை 48.2 புள்ளிகளையும் பெற்றுள்ளது.