Categories
பல்சுவை

உலகத்தில் முதன் முதலாக…. மனிதனுக்கு பன்றியின் இதயம்…. அறிவியல் அதிசயம்….!!!

இன்றைய காலகட்டத்தில் இதய அறுவை சிகிச்சை என்பது ஏராளமானோருக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் உலகத்தில் முதன்முதலாக அமெரிக்காவில் 57 வயதான டேவிட் என்ற நபருக்கு பன்றியின் இதயத்தை வைத்து ஆபரேஷன் செய்தனர். அந்த நபருக்கு பன்றியின் இதயம் வைக்கப்பட்டிருந்தாலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஆனால் 2 மாதங்கள் ஆன பிறகு 2022-ம் ஆண்டு கடந்த மார்ச் 9-ம் தேதி இறந்துவிட்டார்.

ஆனால் டேவிட் இறந்ததற்கான சரியான காரணம் மருத்துவர்களுக்கு இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் டேவிட் இறப்பதற்கு முன்பு தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் இறந்து போன டேவிட்டுக்கு பல மருத்துவர்கள் நன்றி கூறினார். ஏனெனில் டேவிட் பன்றியின் இதயத்தை வைப்பதற்கு சம்மதித்ததால் மருத்துவ உலகில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது.

Categories

Tech |